குற்ற ஆவண பாதுகாப்பகத்தில் 2 லட்சம் கைரேகைகள் அழிந்தன?

சென்னை காவல்துறையில் உள்ள கைரேகைப் பிரிவுதான் இந்திய காவல்துறையிலேயே மிகவும் பழமையான பிரிவாகும். கடந்த 1875ம் ஆண்டு இந்த கைரேகைப் பிரிவு தொடங்கப்பட்டது. ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டது இந்த கை ரேகைப் பிரிவு.
சென்னை காவல்துறையின் பல்வேறு பிரிவுகள் நவீனமயமாக்கப்பட்டு விட்ட போதிலும், கை ரேகைப் பிரிவு மட்டும் இன்னும் அப்படியேதான் உள்ளது. இந்தப் பிரிவை கம்ப்யூட்டர்மயமாக்க அரசு ரூ. 80 லட்சம் நிதி ஒதுக்கியது. ஆனால் என்னகாரணத்தாலோ இன்னும் அது முழுமை அடையாமல் இழுபறியாகவே உள்ளது.
இந் நிலையில் கடந்த 1999ம் ஆண்டு கைரேகைகளை கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்யும் முறை இங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி பேக்ஸ்4 என்ற முறை பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த முறையால் உரிய பலன் கிடைக்கவில்லை என்பது பின்னர் தெரிய வந்தது.
இதையடுத்து இதன் அட்வான்ஸ் சிஸ்டமான பேக்ஸ்5 முறைக்கு கைரேகைப் பிரிவு மாறியது. ஆனால் இங்குதான் குழப்பமே. ஏற்கனவே இருந்த பேக்ஸ்4 சிஸ்டத்தில் சில மாறுதல்களைச் செய்துதான் இந்த பேக்ஸ்5 முறையை உருவாக்கி அதற்கு மாறியது கைரேகைப் பிரிவு. இதற்கு செலவிடப்பட்ட தொகை ரூ. 60 லட்சமாகும்.
இவ்வாறு டெக்னாலஜி அப்கிரடேசன் செய்தபோது, பேக்ஸ்4-ல் பதிவு செய்து வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் கைரேகைகள் அழிந்து போய் விட்டனவாம்.
பல முக்கிய குற்றவாளிகளின் கைரேகைகள் இதில் இடம்பெற்றிருந்தன. அவை அனைத்தும் தற்போது அழிந்து போய் விட்டன. இதனால் பல வழக்குகளின் விசாரணையில் பெரும் பாதிப்பு ஏற்படும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து உரிய முறையில் அரசு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கைரேகைப் பிரிவில் பணியாற்றுவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருப்பினும் இதை மறுக்கிறார் குற்ற ஆவண காப்பக இயக்குநரான ஐஜி லட்சுமி பிரசாத். பேக்ஸ் 4லிருந்து 5க்கு மாற்றும்போது எந்த கை ரேகையும் அழியவில்லை. மாறாக 75 ஆயிரம் பேருடைய கைரேகைகள் சரியாக பதிவாகாமல் மங்கலாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
குற்ற ரேகைகளை அழிக்க உதவும் கைரேகைப் பிரிவில் இப்படி ஒரு குழப்பமா?
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications