திருச்செந்தூர்: போலீஸ் 'பார்ட்டி'-கைதிகள் எஸ்கேப்!
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கிளைச் சிறையிலிருந்து மூன்று கைதிகள் இன்று காலை தப்பி ஓடினர். சிறைப் போலீஸார் மது விருந்தில் ஈடுபட்டிருந்ததாகவும், அதைப் பயன்படுத்திக் கொண்டு 3 பேரும் தப்பி விட்டதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.
திருச்செந்தூர் கிளைச் சிறையில், தூத்துக்குடியைச் சேர்ந்த பட்டுராஜா, மகாராஜன், முத்துச்செல்வன் ஆகிய மூன்று கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் மூன்று பேரும் இன்று அதிகாலை 2.30 மணிக்கு தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து பாளையங்கோட்டை மத்தியசிறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், திருச்செந்தூர் சிறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் நேற்று இரவு மது விருந்தில் ஈடுபட்டிருந்ததாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. காவலர்கள் மது மயக்கத்தில் இருந்ததால், அதைப் பயன்படுத்திக் கொண்டு 3 கைதிகளும் தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications