'எண்ணை கப்பல் வராததே டீசல் தட்டுப்பாட்டுக்கு காரணம்'

இதுகுறித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான எண்ணை நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பிபிசில், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவற்றின் சார்பில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் செயல் இயக்குநர் ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கை:
இந்தப் பிரச்சினை தற்காலிகமானதுதான். இதற்கான எண்ணை கப்பலில் இருந்து டீசல் சப்ளையை உரிய நேரத்தில் பிபிசிஎல் நிறுவனத்தால் பெற முடியாமல் போய் விட்டது. இதன் காரணமாகவே தற்காலிக பற்றாக்குறை நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தத் தட்டுப்பாட்டால், கையிருப்பில் இருந்த டீசலின் அளவும் குறைந்து விட்டது. எனவே பிபிசிஎல்லின் வாடிக்கையாளர்கள் பலர், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் போன்ற மற்ற நிறுவனங்களை நாட அறிவுறுத்தப்பட்டனர்.
இந்த இரு நிறுவனங்களும் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வழக்கமான அளவை விட அதிக டீசல் சப்ளை செய்து நிலைமையை சமாளித்து வருகின்றன.
தற்போது நிலவும் டீசல் பற்றாக்குறை இன்னும் 24 மணி நேரத்தில் சரியாகி விடும். விரைவில் பிபிசிஎல் டேங்கர் கப்பல் சென்னை வரவுள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் பீதியோ, வருத்தமோ அடைய வேண்டாம்.
விரைவில் டீசல் தாராளமாக கிடைப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இடைக்காலத்தில் ஏற்பட்ட தட்டுப்பாட்டுக்கு வருந்துகிறோம். பிபிசிஎல் டேங்கர் கப்பல் வந்ததும் நிலைமை சீரடைந்து விடும் என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications