ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும்: எச்.ராஜா
திருச்சி: மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
திருச்சி அருகே உள்ள மணச்சநல்லூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்தியா வல்லரசு ஆவதை அமெரிக்கா விரும்பவில்லை. அதனால் தான் அணு ஒப்பந்தத்தை நம் மீது திணிக்க விரும்புகின்றது.
மக்களை திசை திருப்ப காங்கிரஸ், இடது சாரிகள் கூட்டு சதி செய்து நாடகம் ஆடுகின்றனர்.
விலைவாசி உயர்வு பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை. மத்திய அரசு தனது செயல்பாட்டை இழந்து விட்டது.
விலைவாசி உயர்வு, மற்றும் பல பிரச்சனைக்கு காரணமான ஆன்லைன் வர்த்தகத்தினர் மீது மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நடவடிக்கை எடுக்க மறுப்பது ஏன். மக்களை ஏமாற்றும் ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது அவரை பிரதமர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
இந்தியா முழுவதும் விவசாயிகளின் கடன் ரூ 71 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்துள்ளதாக கூறுவது ஏமாற்று வேலை. உண்மையில் தள்ளுபடி செய்தது 28 ஆயிரம் கோடி ரூபாய் தான்.
பாராளுமன்றத்திற்கு எப்போது வேண்டும் என்றாலும் தேர்தல் வரலாம். அப்போது யாருடன் கூட்டணி என்பது முடிவு செய்யப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications