விழுப்புரம்-சைக்கோ மனிதர் அடித்துக் கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே சைக்கோ நபர் என சந்தேகிக்கப்படும் ஒருவரை பொதுமக்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வட மாவட்டங்கள் சிலவற்றில் சமீபகாலமாக சைக்கோ மனிதர்கள் நடமாட்டம் இருப்பதாக கிராம மக்கள் கூறி வருகின்றனர். இவர்கள் தனியாக இருப்பவர்கள், வீட்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருப்பவர்களை தாக்குதாக கூறப்படுகிறது. இந்த சைக்கோ மனிதர்களின் தாக்குதலில் சிலர் இறந்துள்ளனர்.

இதுதொடர்பாக சமீபத்தில் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். அதேபோல சைக்கோ என சந்தேகிக்கப்படும் ஒருவரை கிராம மக்கள் எரித்துக் கொன்ற சம்பவம் நடந்தது.

இந்த நிலையில் விழுப்புரம் அருகே சைக்கோ மனிதர் என்ற கூறப்படும் இன்னொருவரை கிராம மக்கள் அடித்தே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள கங்காராம்பாளையம் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் இன்று நடந்தது. அந்த நபருக்கு 40 வயதிருக்கும். யார், எந்த ஊர் என்று தெரியவில்லை. வினோதமான முறையில் கிராமத்தில் நடமாடியுள்ளார்.

இதையடுத்து அந்த நபரைப் பிடித்து சரமாரியாக கிராம மக்கள் அடித்துள்ளனர். கற்களை வீசியும் தாக்கியுள்ளனர். இதில் அந்த நபர் பரிதாபமாக இறந்து போனார்.

போலீஸார் விரைந்து வந்து இதுகுறித்து விசாரணை நடத்தினர். வழக்குப் பதிவு செய்யப்பட்டு உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+