கோர்ட் ஊழியர்களை மாஜிஸ்திரேட்டாக நியமிக்க வக்கீல்கள் எதிர்ப்பு
சேலம்: நீதிமன்ற ஊழியர்களை மாஜிஸ்திரேட்டாக நியமிக்க தமிழக புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க அவசர கூட்டம் தலைவர் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது. பின்பு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் 201 மாஜிஸ்திரேட் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் மாதம் 2, 3 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறுகிறது.
இந்த தேர்வில் பி.எல். படித்த நீதிமன்ற ஊழியர்களும் கலந்து கொள்ளலாம் என சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வக்கீலாக பதிவு செய்து தொழில் செய்து வருபவர்கள் மட்டுமே இந்த தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று உயர் நீதி மன்றம் அளித்த தீர்ப்பை அமல்படுத்த வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் 4 ம் தேதி வரை தமிழகம், மட்டும் புதுச்சேரி வக்கீல்கள் நீதி மன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications