தூத்துக்குடி துறைமுகம் ஸ்தம்பித்தது!
தூத்துக்குடி: லாரி ஸ்டிரைக் எதிரொலியால் தூத்துக்குடி துறைமுகம் ஸ்தம்பித்தது. 5 ஆயிரம் லாரிகள் ஓடாததால் சரக்குகள் அனுப்ப முடியாமல் தேங்கிக் கிடக்கின்றன.
தூத்துக்குடி துறைமுகத்திற்கு பல நாடுகளில் இருந்து சரக்கு கப்பல்கள் வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து உரங்கள், நிலக்கரி, அமிலங்கள், இரும்பு உதிரி பாகங்கள் உள்பட பல பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
தினந்தோறும் தூத்துக்குடி துறைமுகத்திற்கு 1000-க்கான லாரிகள் வந்து செல்லும். லாரி ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டதால் ஆங்கங்கே லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. கப்பலில் இருந்து வரும் சரக்குகள் வெளியே எடுத்து செல்ல முடியவில்லை.
உரங்கள் பல பகுதிகளுக்கு அனுப்ப முடியாமல் தேங்கி கிடக்கின்றன. துறைமுகம் வெளியே லாரிகள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டு உள்ளது. அதே போல தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து தூத்துக்குடி லாரி உரிமையாளர் சங்க தலைவர் சாமுவேல் கூறியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் உள்ளன. லாரி ஸ்டிரைக் அறிவிக்கப்பட்ட நேரத்தில் இருந்து அந்தந்த பகுதியில் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி துறைமுகத்தி்ல் கப்பலில் இருந்து சரக்குகள் ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் சுமார் 1000க்கும் மேற்பட்ட லாரிகள் செல்லும். நேற்று சரக்குகளை ஏற்றிக் கொண்டு எந்த லாரியும் செல்லவில்லை. அங்குள்ள சரக்குகள் தேங்கி கிடக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறு, சிறு உப்பளங்களாக சுமார் 800க்கும் மேற்பட்ட உப்பளங்கள் உள்ளன. தூத்துக்குடியில் பிரதான தொழில் உப்பு உற்பத்தி ஆகும். இங்கு தயாரிக்கப்படும் உப்பு ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
வெளிமாநிலங்களில் தூத்துக்குடி உப்புக்கு தனி மவுசு உண்டு. தினந்தோறும் சுமார் 200 முதல் 300 லாரிகளில் வெளிமாநிலங்களுக்கு உப்பு கொண்டு செல்லப்படுகிறது. லாரி ஸ்டிரைக்கை ஓட்டி உப்பளஙகளில் உப்பு ஏற்றப்படவில்லை. அந்த பகுதிகளில் உப்பு அப்படியே தேங்கி உள்ளது. உப்பு ஏற்றும் லாரிகள் ஆங்கங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications