நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் பிணம்
சென்னை: மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னை வந்த நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏ.சி. பெட்டியில் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்ட நிலையில் கிடந்தார்.
இந்த ரயில் நேற்று காலை 5 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தது. பயணிகள் அனைவரும் இறங்கிவிட்ட நிலையில், அந்த ரயில் பேசின்பிரிட்ஜ் ரயில்வே பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
காலை 10 மணியளவில் ரயில்வே ஊழியர்கள் பெட்டிகள சுத்தம் செய்ய நுழைந்தபோது 2ம் வகுப்பு ஏ.சி பெட்டியில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தூக்கிய நிலையில், இருக்கையில் பிணமாக உட்கார்ந்த நிலையில் காணப்பட்டார்.
அவரது முகம் முழுவதுமாக சட்டையால் மூடப்பட்டிருந்தது.
நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதனால், அந்த வாலிபர் ரயிலில் பயணம் செய்த போது தூக்கில் தொங்கியிருக்க வாய்ப்பில்லை.
பேசின்பிரிட்ஜ் பணிமனை, அல்லது சென்ட்ரல்-பேசின்பிரிட்ஜ் இடையே ரயில் நின்றிருந்தபோது தான் அவரை யாரோ தூக்கில் தொங்கவிட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இது குறித்து சென்டிரல் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், இது தற்கொலையாகத் தெரியவில்லை. அவரது கால்கள் இரண்டும் தரையை தொட்ட நிலையில் இருந்தனர். இதனால் தற்கொலை இல்லை. யாரோ கொலை செய்து ரயில் பெட்டிக்குள் தொங்க விட்டுள்ளனர் என்றனர்.












Click it and Unblock the Notifications