73வது பிறந்த நாளை கொண்டாடினார் தலாய் லாமா
டெல்லி: திபெத்திய மத குரு தலாய் லாமா இன்று தனது 73வது பிறந்த நாளை அமைதியான முறையில் கொண்டாடினார்.
ஜெட்சன் ஜம்பெல் கவாங் லோப்சாங் யெஷே டென்ஜின் கியாட்சோ என்ற இயற்பெயரைக் கொண்டவர் தலாய் லாமா. 1935ம் ஆண்டு, ஜூலை மாதம் 6ம் தேதி பிறந்தவரான தலாய் லாமா, 1950ம் ஆண்டு திபெத்திய புத்த மதத்தின் 14வது குருவாக (தலாய் லாமா) பொறுப்பேற்றார்.
திபெத்தின் குயிங்காய் மாகாணத்தில் உள்ள டக்ட்செர் என்ற கிராமத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோருக்கு 5வது பிள்ளையாக பிறந்தவர் தலாய் லாமா. இவரது பெற்றோருக்கு மொத்தம் 16 குழந்தைகள்.
இவர் பிறந்த 2வது வருடத்தில் 13வது தலாய் லாமாவின் மறு பிறவியாக அறிவிக்கப்பட்டார். 1950ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி, 15வயதாக இருந்தபோது, 14வது தலாய் லாமாவாக நியமிக்கப்பட்டார். திபெத்திய நிர்வாகத்தையும் அது முதல் மேற்கொள்ள ஆரம்பித்தார்.
உலகெங்கும் உள்ள திபெத்தியர்களால் தலாய் லாமா பெரிதும் மதிக்கப்படுகிறார். இந்தியாவின் தர்மசாலாவில் திபெத்திய அரசை நிறுவி அதன் தலைவராக இருந்து வருகிறார். திபெத்தை சீனாவின் பிடியிலிருந்து மீட்கும் போராட்டத்தையும் சளைக்காமல் நடத்தி வருகிறார்.
அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுள்ள தலாய் லாமா, உலகின் மிகப் பிரபலமான புத்த துறவியாகவும் விளங்குகிறார்.












Click it and Unblock the Notifications