டாக்டர் வேணுகோபால் பாராட்டு விழா - பிரதமர் பங்கேற்பு
டெல்லி: டெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தின் முன்னாள் இயக்குநர் டாக்டர் வேணுகோபாலுக்கு டெல்லியில் நடந்த பாராட்டு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டார்.
கடந்த பல மாதங்களாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸுடன் கடும் பனிப்போரில் ஈடுபட்டிருந்த எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர் டாக்டர் வேணுகோபால் சமீபத்தில் அந்தப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
இதையடுத்து அவருக்கு டெல்லியில் பாராட்டு விழா நடந்தது. இதில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டார். பிரதமர் அலுவலக இணை அமைச்சர் பிருத்விராஜ் செளகான், திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா மற்றும் 20க்கும் மேற்பட்ட டாக்டர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வேணுகோபாலைப் பாராட்டிப் பேசினர்.
தனது அந்தரங்க மருத்துவர் என்ற ரீதியில், இந்த பாராட்டு விழாவில் பிரதமர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.