ஒரே விமானத்தில் பயணித்த ஆற்காடு வீராசாமி - ராமதாஸ்
திருச்சி: காடுவெட்டி குரு கைதுசெய்யப்பட்டுள்ள பதட்டமான பின்னணியில், சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் அமைச்சர் ஆற்காடு வீராசாமியும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும்ம் பயணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சியில் தென்னிந்திய நாட்டுப்புற கலைவிழா, மற்றும் திருச்சி அருகில் உள்ள ஒரு தனியார் என்ஜீனியரிங் கல்லூரி துவக்க விழாவில் கலந்து கொள்ள தமிழக மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி சென்னையில் இருந்து திருச்சிக்கு பேரமவுண்ட் விமானம் மூலம் வந்தார்.
அதே விமானத்தில் புதுக்கோட்டையில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் வருகை தந்தார்.
திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் ஆற்காடு வீராசாமியை வரவேற்க போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என். நேரு, வனத்துறை அமைச்சர் செல்வராஜ், திருச்சி மேயர் சாருபாலா தொண்டைமான் மற்றும் பலர் வருகை தந்து காத்திருந்தனர்.
அதே போன்று, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை வரவேற்க பாமக நிர்வாகிகளும் விமான நிலையத்திற்கு வந்து காத்திருந்தனர்.
இதனால் விமான நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. இருப்பினும் அமைதியான முறையில் இரு தலைவர்களையும் அவரவர் கட்சியினர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications