உடனே மெஜாரிட்டியை நிரூபியுங்கள்-பாஜக

ஆதரவை வாபஸ் பெறுவதாக இடதுசாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின் பாஜகவின் செய்தி்த் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் நிருபர்களிடம் கூறுகையில்,
மத்திய அரசு துளியும் தாமதிக்காமல் உடனடியாக தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும். அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை உடனடியாக கொண்டு வர மறுத்தால் ஜனாதிபதி தலையிட்டு பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிட வேண்டும்.
1999ம் ஆண்டில் பாஜக ஆட்சியில் உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க பிரதமர் வாஜ்பாய்க்கு அப்போதைய ஜனாதிபதி உத்தரவிட்டார். அதே போல இப்போதும் உத்தரவிட வேண்டும்.
சமாஜ்வாடி கட்சியின் ஆதரவு இருப்பதாக வெளியில் சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அதை நிரூபிக்க வேண்டிய இடம் நாடாளுமன்றம் என்றார் ஜாவேத்கர்.
அத்வானி இல்லத்தில் அவரச கூட்டம்:
இந் நிலையில் பாஜக தலைவர் அத்வானியின் இல்லத்தில் இன்று மூத்த பாஜக தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர்.
அதில் பேசிய தலைவர்கள், பெரும்பான்மையை நிரூபிக்காத வரை, சிறுபான்மை அரசாக உள்ள பிரதமர் மன்மோகன் சிங் அரசு, சர்வதேச ஒப்பந்தங்கள் எதிலும் கையெழுத்திடக் கூடாது, முக்கிய சர்வதேச பிரச்சனைகள் குறித்து விவாதிக்கவும் கூடாது என்றும் கருத்து தெரிவித்தனர்.
ஐசியுவில் மத்திய அரசு:
இதற்கிடையே, திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூறுகையில், மத்திய அரசு உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும். பெரும்பான்மை பலத்தை லோக்சபாவில் நிரூபிக்க வேண்டும்.
கணக்குப்படி பார்த்தால் மத்தியில் தற்போது அரசு எதுவும் இல்லை. மத்திய அரசு தற்போது கவலைக்கிடமான நிலையில், ஐசியூவில் உள்ளது. பிற கட்சிகள் சேர்ந்து காப்பாற்ற வேண்டிய மோசமான நிலையில் அது உள்ளது.
நாட்டில் பொதுத் தேர்தல் வர வேண்டும், தற்போதைய அரசு போக வேண்டும், நல்லாட்சி மலர வேண்டும் என்பதே மக்களின் தற்போதைய கருத்தாகும் என்றார்.
-
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
விஜய்யை என்டிஏ கூட்டணிக்கு அழைத்த பாஜக நிர்வாகியின் பதவி பறிப்பு.. நயினார் நாகேந்திரன் அதிரடி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்! -
ONOE: "ஒரே நாடு ஒரே தேர்தல்.. நோயை விடக் கொடிய மருந்து" - முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்












Click it and Unblock the Notifications