மதுரை: தண்டவாளத்தில் விரிசல்-தப்பியது வைகை

Subscribe to Oneindia Tamil

மதுரை: தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த பெரிய விரிசல் உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால், பெரும் விபத்திலிருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயில்

சென்னையில் இருந்து மதுரை வந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலும், மைசூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவை இன்று காலை 6.30 மணியளவில் குறைந்த நேர சோழவந்தானை தாண்டிச் சென்றன.

இரு ரயில்களும் போன பின்னர் சோழவந்தான் - கொடை ரோடு இடையிலான ரயில் பாதையை கேங்மென்கள் சோதனையிட்டனர். அப்போது சோழவந்தானுக்கும் கருப்பட்டி என்ற இடத்திற்கும் இடையே ஒரு இடத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருந்ததை அவர்கள் பார்த்தனர்.

இதுகுறித்து சோழவந்தான் மற்றும் கொடைரோடு ரெயில் நிலையங்களுக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். உடனடியாக
ரெயில்வே பொறியாளர்கள் அங்கு விரைந்து சென்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், மதுரையில் இருந்து சென்னைக்கு காலை 6.50 மணிக்கு புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 7.25 மணிக்கு சோழவந்தானை அடைந்து விட்டது. இதையடுத்து ரெயில் சோழவந்தானிலேயே நிறுத்தப்பட்டது.

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காலை 8.30 மணிக்கு தண்டவாளம் சரி செய்யப்பட்டது. அதன்பின்னர் 1 மணி நேரம் தாமதமாக வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் சோழவந்தானிலிருந்து புறப்பட்டுச் சென்றது.

இதன் மூலம் வைகை மற்றும் முன்னதாக சென்ற பாண்டியன் எக்ஸ்பிரஸ் ஆகியவை பெரும் விபத்திலிருந்து தப்பின.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+