இடதுசாரிகள் ஆதரவு வாபஸால் அரசுக்கு ஆபத்தில்லை: மன்மோகன் சிங்
டொயோகோ: இடதுசாரிகள் தங்களது ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளதால் அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் அணு சக்தி ஒப்பந்தம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். அதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
இடதுசாரிகள் அரசுக்குஅளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றுள்ளனர். இதனால் அரசுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. விரைவில் அணு சக்தி ஏஜென்சியிடம் பேசவுள்ளோம். ஒப்பந்தம் உறுதியாக நிறைவேறும் என்றார்.
முன்னதாக சீன அதிபர் ஹூ ஜின்டாவோவுடன் மன்மோகன் சிங் முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தினார். இன்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை அவர் சந்தித்துப் பேசவுள்ளார். இன்று மட்டும் இருமுறை அவர் புஷ்ஷுடன் பேசவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக சிங்கும், புஷ்ஷும் முக்கிய பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளனர்.












Click it and Unblock the Notifications