எதிர்த்து வாக்கு-வைகோ: ஆதரிப்போம்-எல்ஜி
இப்போது அமெரிக்காவில் உள்ள வைகோ இது குறித்து கூறுகையில்,
மத்திய அரசை ஆதரித்து வாக்களிக்க மாட்டோம். எதிர்த்தே வாக்களிப்போம். இது தொடர்பாக கட்சியின் 4 எம்பிக்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார்.
நாங்க ஆதரிப்போம்: எல்ஜி
ஆனால், லோக்சபாவில் மத்திய அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினால், அரசுக்கு ஆதரவாக நாங்கள் வாக்களிப்போம் என மதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டு தனியாக இயங்கி வரும் திருச்சி எம்.பி. எல்.கணேசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்கள் திமுக கூட்டணியில் இருக்கிறோம். திமுக கூட்டணி என்ன முடிவெடுக்கிறதோ, அதுவே எங்களது முடிவும்.
அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நாங்கள் வாக்களிப்போம் என்றார் கணேசன்.
அதிமுகவுக்கு மக்களவையில் எம்பிக்களே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டி.ஆர்.எஸ். ஆதரவை பெற பவார் முயற்சி:
இதற்கிடையே நம்பிக்கை தீர்மானத்தை வெல்ல அரசுக்கு போதிய எம்பிக்களின் ஆதரவு திரட்டும் வேலைகளில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.
தெலுங்கானா ராஷ்ரீய சமீதியின் ஆதரவைப் பெறும் முயற்சிகளில் மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து அக் கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் கூறுகையில்,
மத்திய அரசுக்கு ஆதரவளிக்க டி.ஆர்.எஸ். தயாராக உள்ளது. ஆனால், தெலுங்கானா மாநிலம் அமைக்க பிரதமர் மன்மோகன் சிங் முன் வர வேண்டும்.
எங்களது கனவான புதிய தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு செயல் வடிவம் தரும் பட்சத்தில் மத்திய அரசை ஆதரிக்க தயாராக இருக்கிறோம் என்றார்.
மாயாவதி முடிவு என்ன?:
இந் நிலையில் நம்பிக்கை தீர்மானத்தை ஆதரிக்கிறாரா இல்லையா என்பது குறித்து உத்தரப் பிரதேச முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி இன்னும் முடிவை அறிவிக்கவில்லை.
சரியான நேரத்தில் முடிவை அறிவிப்பேன் என்று கூறி சஸ்பெண்சை கூட்டியுள்ளார்.