திமுக கார் மீது குண்டு-பாமக அலுவலகம் சூறை
அரியலூர்: காடுவெட்டி குரு கைது செய்யப்பட்ட விவகாரத்தில் செந்துறை திமுக பிரமுகரின் கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மேலும் பாமக அலுவலகம் மர்ம நபர்களால் சூறையாடப்பட்டது. இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.
அரியலூர் அருகே உள்ளது செந்துறை. இந்த பகுதி திமுக ஒன்றிய அவைத்த லைவராக இருப்பவர் செல்வராஜ். இவரது வீட்டு முன்பு அவரது டாடா சுமோ கார் நிறுத்தி வைப்பது வழக்கம்.
நேற்றும் வழக்கம் போல் காரை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்று விட்டார். இந்த நிலையில் இரவு திடீரென வெடி சத்தம் கேட்டது. வெளியே வந்து செல்வராஜ் பார்த்த போது அவரது கார் தீ பிடித்து மளமள வென எரிந்து ெகாண்டிருந்தது.
அதை கண்டு திடுக்கிட்ட அவர் அதை அனைக்க கடும் முயறச்சி மேற்கொண்டார். ஆனால் கார் முற்றிலும் எரிந்து எலும்பு கூடு போல ஆனது. அப்போது இரண்டு பேர் அவசர அவசரமாக மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
இதை அறிந்த திமுகவினர் ஒன்று திரண்டு செந்துறை காவல் நிலையம் முன்பு முற்றுகை போராட்டமும், மறியலும் நடத்தினர்.
இந்த நிலையில் செந்துறை பாமக அலுவலகத்தை மர்ம கும்பல் ஒன்று உள்ளே புகுந்து அங்கிருந்த சேர், நாற்காலி, டேபிள், பீரோ போன்ற பொருட்களை அடித்து உடைத்து நாசம் செய்து விட்டுச் சென்றது.
பாமக-திமுக மோதல் காரணமாக அரியலூர் மாவட்டம் தொடர்ந்து பதட்டத்துடன் உள்ளது.












Click it and Unblock the Notifications