மக்களுக்கு மத்திய அரசு துரோகம்: காரத்
டெல்லி: நாட்டு மக்களுக்கு துரோகம் செய்து விட்டது மத்திய அரசு என்று இடதுசாரிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
சர்வதேச அணு சக்தி ஏஜென்சியிடம் வழங்கிய பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான வரைவு ஒப்பந்தத்தை போர்டு உறுப்பினர்களிடம் சுற்றுக்கு விட இந்தியா நேற்று அனுமதி அளித்தது. இதையடுத்து போர்டு உறுப்பினர்களிடம் வரைவு ஒப்பந்த நகல் சுற்றுக்கு விடப்பட்டுள்ளது.
இந் நிலையில் வரைவு ஒப்பந்த நகலில் உள்ளவை குறித்த சாராம்சத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இதற்கு இடதுசாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இடதுசாரி தலைவர்கள் பிரகாஷ் காரத், பரதன், பிஸ்வாஸ் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
பிரகாஷ் காரத் பேசுகையில், நாட்டு மக்களுக்கு மன்மோகன் சிங் அரசு செய்துள்ள மிகப் பெரிய துரோகம் இது.
அணு சக்தி ஒப்பந்தத்தை எந்த வகையிலும் நிறைவேற நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அணு சக்தி ஒப்பந்தத்தை அனைத்து வழியிலும் நாங்கள் எதிர்ப்போம்.
சர்வதேச அணு சக்தி ஏஜென்சியை அணுகுவதற்கு முன்பு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என பிரணாப் முகர்ஜி அறிவித்திருந்தார். ஆனால் அந்த வாக்குறுதியை மத்திய அரசு மீறி விட்டது.
இதன் மூலம் இடதுசாரிகளுக்கும், இந்த நாட்டு மக்களுக்கும் கொடுத்த உறுதிமொழியை, நம்பகத்தன்மையை மத்திய அரசு இழந்து விட்டது. நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டது.
வரைவு ஒப்பந்தம் ரகசியமானது, அரசில் சேர்ந்தால்தான் அதை காட்டுவோம் என்றெல்லாம் கூறி வந்தது மத்திய அரசு. ஆனால் நேற்றே பல அமெரிக்க இணையதளங்களில் அந்த வரைவு ஒப்பந்தம் வெளியிடப்பட்டு விட்டது.
மன்மோகன் சிங் அரசு சிறுபான்மை அரசாக மாறிய 24 மணி நேரத்திற்குள்ளாகவே அணு சக்தி ஏஜென்சியை மத்திய அரசு அணுகியுள்ளது.
நாட்டு மக்களை தயவு செய்து கேலிப் பொருட்களாகி விடாதீர்கள் என்று காங்கிரஸ் கட்சியிடம் கேட்டுக் கொள்கிறோம் என்றார் காரத்.
-
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன்












Click it and Unblock the Notifications