சர்வதேச அணு ஏஜென்சி உறுப்பினர்கள் பரிசீலனையில் ஒப்பந்தம்

இந்திய-அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கும், அமெரிக்க அதிபர் புஷ்ஷும் ஜப்பானில் சந்தித்துப் பேசிய சில மணி நேரங்களில், வரைவு ஒப்பந்த நகல், சர்வதேச அணு சக்தி ஏஜென்சியிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து இந்த நகல் ஏஜென்சியின் போர்டு உறுப்பினர்களிடம் சுற்றுக்கு விடப்பட்டுள்ளதாக ஏஜென்சியின் செய்தித் தொடர்பாளர் மெலிசா பிளமிங் வியன்னாவில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அணு சக்தி ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றுதான் இந்த வரைவு ஒப்பந்தம். இதில் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் இடம் பெற்றிருக்கிறது. இந்திய அரசின் வேண்டுகோளின் பேரில் இந்த வரைவு ஒப்பந்த நகல் ஏஜென்சியின் போர்டு உறுப்பினர்களிடம் சுற்றுக்கு விடப்பட்டிருப்பதாக மெலிசா தெரிவித்துள்ளார். இதை போர்டு உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டால் அணு சக்தி ஒப்பந்தம் அடுத்த முக்கிய கட்டத்தை நோக்கி பயணிக்கும்.
வரைவு ஒப்பந்தம் குறித்து மெலிசா வெளியிட்டுள்ள அறிக்கையில், போர்டு உறுப்பினர்கள் ஒப்பந்த நகலை பரிசீலனை செய்வார்கள். இதையடுத்து இதுகுறித்து அனைத்து உறுப்பினர்களும் கூடி விவாதிக்க நாள் குறிக்கப்படும். ஜூலை 28ம் தேதி நடைபெறவுள்ள சிறப்புக் கூட்டத்தில் தேதி முடிவு செய்யப்படும்.
வரைவு ஒப்பந்தம் 30 பக்கங்களைக் கொண்டதாக உள்ளது. இந்த ஒப்பந்தம் இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தில் திருப்புமுனையாகும் என்று கூறியுள்ளார்.
ஜி-8 அமைப்பு ஆதரவு:
இதற்கிடையே, இந்திய - அணு சக்தி ஒப்பந்தத்திற்கு அனைத்து வகையிலும் ஆதரவு தர ஜி-8 நாடுகளின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக சர்வதேச அணு சக்தி ஏஜென்சி, என்.எஸ்.ஜி மற்றும் உறுப்பு நாடுகளுடன் இணைந்து செயலாற்றப் போவதாக ஜி-8 அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றியாக இது கருதப்படுகிறது. இதுகுறித்து ஜி-8 மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட அமைப்பின் தலைமை வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா, சர்வதேச அணு சக்தி ஏஜென்சி, அணு பொருள் விநியோக நாடுகளின் கூட்டமைப்பு ஆகியவற்றின் இன்னும் முழுமையான அளவில் இணைந்து செயல்பட ஜி-8 தீர்மானித்துள்ளது.
மேலும், இந்தியாவின் சிவில் அணு ஒத்துழைப்பிலும் ஜி-8 நெருங்கிச் செயல்படும். இந்தியாவின் வளர்ந்து வரும் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கிலும் இந்த ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications