மன்மோகன் சிங்குடன் பிரணாப் முக்கிய ஆலோசனை
டெல்லி: பிரமதர் மன்மோகன் சிங்கை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் ஜப்பான் சென்றிருந்த சமயத்தில், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக நடந்த அரசியல் நிகழ்வுகள் குறித்தும், அரசியல் நிலவரம் குறித்தும் பிரதமருடன் பிரணாப் முக்கிய ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
இன்று மாலை குடியரசுத் தலைவரை பிரதமர் சந்திக்கவுள்ளார். அதுதொடர்பாகவும் பிரணாபுடன், பிரதமர் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
அரசுக்கு ராஜ்பாபர் ஆதரவு:
இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நடிகர் ராஜ்பாபர், தனது ஆதரவை அரசுக்குத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இவர் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பாரா என்பதில் கேள்விக்குறி இருந்து வந்தது. இந்த நிலையில், இன்று சோனியா காந்தியை சந்தித்த ராஜ்பாபர், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்போது அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications