இலஞ்சி குமாரர் கோவில் யானை பாகன் திடீர் சாவு
தென்காசி: புகழ்பெற்ற இலஞ்சி குமார்ர் கோயில் யானைப் பாகன் திடீரென சுருண்டு விழுந்து இறந்தார்.
தென்காசி அருகேயுள்ள இலஞ்சியை சேர்ந்தவர் பரமசிவன். இவர் ஒன்றரை ஆண்டுகளாக இலஞ்சி குமாரர் கோவிலில் குட்டி யானைகளுக்கு பாகனாக இருந்துள்ளார். அதற்கு தேவையான இலை மற்றும் தழைகளை பறித்துப் போட்டு பராமரித்து வந்தார். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகளாகிறது. குழந்தை இல்லை.
குடிப்பழக்கம் இருந்ததால் பரமசிவன் கடந்த 10 ஆண்டுகளாக மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். பரமசிவன் தீணி போட்டு வளர்த்து வந்த குட்டி யானை தெய்வாணை கடந்த 2 மாதத்திற்கு முன் திடீரென இறந்துவிட்டது.
யானைகளுக்கு பாகன் சரியாக தீனி போடாததாலேயே தெய்வாணை இறந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் இன்று காலை குமாரர் கோயில் அன்னதானக் கூடம் அருகே அமர்ந்து பீடிக் குடித்து கொண்டிருந்த பரமசிவன் திடீரென சுருண்டு விழுந்து இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி மாரியம்மாளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக குற்றாலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் யானை இறந்த 2 மாதத்தில் அதற்கு தீனி போட்டு வந்த பாகன் இறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications