சிகிச்சைக்காக சென்னை வந்த பஹ்ரைன் குழந்தை விமானத்தில் மரணம்
துபாய்: சென்னையில் உள்ள மருத்துவமனையில் இருதய அறுவைச் சிகிச்சைக்காக பஹ்ரைனிலிருந்து அழைத்து வரப்பட்ட பெண் குழந்தை ஓடும் விமானத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
பஹ்ரைனைச் சேர்ந்த முகம்மது யூசுப் என்பவரின் குழந்தை பாத்திமா தாரிக் யூசுப். ஒரு வயதான இக்குழந்தைக்கு இருதய அறுவைச் சிகிச்சை செய்ய முடிவெடுக்கப்பட்டது. சென்னையில் உள்ள பிரான்டியர் லைஃப் லைன் மருத்துவமனையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதையடுத்து தனது குழந்தை மற்றும் மனைவியுடன் யூசுப் சென்னைக்குக் கிளம்பினார். ஆனால் வெள்ளிக்கிழமை அதிகாலையில் விமானம் சென்னையை நெருங்கியபோது பாத்திமாக பரிதாபமாக உயிரிழந்தாள்.
சென்னையில் விமானம் தரையிறங்கியதும் பாத்திமாவின் மரணத்தை டாக்டர்கள் உறுதி செய்தனர்.இதையடுத்து உடலுடன் இன்று மீண்டும் பஹ்ரைன் திரும்புகின்றனர் யூசுப் தம்பதியினர்.
பிறந்தபோதே பாத்திமாவின் இருதயத்தில் கோளாறு இருந்தது. இதையடுத்து குழந்தையுடன் சென்னைக்கு வந்து டாக்டர்களைப் பார்த்தனர் யூசுப் தம்பதியினர். அப்போது அறுவைச் சிகிச்சை செய்யும் அளவுக்கு குழந்தை வளரவில்லை என்று கூறிய டாக்டர்கள், ஒரு வயதான பின்னர் மீண்டும் வருமாறு அறிவுறுத்தினர்.
இதையடுத்தே பாத்திமாவுடன் மீண்டும் சென்னைக்குக் கிளம்பினார் யூசுப். ஆனால் விமானத்தில் பாத்திமாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சில நிமிடங்களில் பரிதாபமாக பாத்திமா உயிர் பிரிந்தது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு












Click it and Unblock the Notifications