அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு துவக்கம்-எதிராக சதி?
சென்னை: அரசு கேபிள் டிவி முதல் கட்டமாக தஞ்சை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் செயல்படத் தொடங்கிவிட்டது. இன்று காலை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்ஸிங் மூலம் முதல்வர் கருணாநிதி, இந்த 4 மாவட்டங்களுக்குமான கேபிள் கட்டுப்பாட்டு மையத்தைத் துவங்கி வைத்தார்.
ஆனால் இந்தத் தகவல் பொதுமக்களுக்கு முழுமையாகப் போய்ச் சேர்வதைத் தடுக்கும் வகையில் அரசு அதிகாரிகள் சிலர் செயல்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
பொதுமக்களின் வசதிக்காக குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி இணைப்புகளை வழங்க அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் உருவாக்கப்பட்டது. இந்த கார்ப்பரேஷன் சார்பில் தஞ்சை, நெல்லை, கோவை, வேலூர் ஆகிய நான்கு இடங்களில் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு பக்கத்து மாவட்டங்களுக்கு சிக்னல்களை வழங்க முடிவு செய்யப்பட்டது.
முதல் கட்டமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டது.
தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி ஆகிய நான்கு மாவட்ட தலைநகரங்களில் இன்று முதல் கேபிள் டிவி ஒளிபரப்பு தொடங்கப் படும். படிப்படியாக கோவை, நெல்லை, வேலூரில் ஒளிபரப்பு தொடங்கப்படுவதுடன் சென்னை யில் செப்டம்பர் 15-ந் தேதி அரசு கேபிள் டிவி இயங்கும்.
அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் முதல் சேவையை முதலமைச்சர் கருணாநிதி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி இன்று துவக்கி வைத்தார்.
தஞ்சாவூரிலும் அதே நேரத்தில் இந்த துவக்க விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருச்சி கலெக்டர் சவுண்டையா, தஞ்சை கலெக்டர் விஜய ராஜ்குமார், திருவாரூர் கலெக்டர் சந்திரசேகர், நாகை கலெக்டர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரசு கேபிள் டிவி துவங்கப் பட்டதாக வெளியே தகவல் தெரிந்ததும் அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
தடுக்க சதி?:
சுமார் 60 சேனல்கள் அரசு கேபிள் டிவி மூலம், ரூ.100 செலவில் மக்கள் பார்க்கலாம் என்று கூறப்பட்டதையொட்டி, நான்கு மாவட்டங்களையும் சேர்ந்த மக்கள் அரசு கேபிள் டிவியை ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.
இந்த கேபிள் டிவி துவக்கத்தை முறைப்படி மக்களுக்கு அறிவிக்காமலும், முடிந்த வரை இந்த சானல்கள் தெரிவதைத் தடுக்கவும் முயற்சிகள் நடப்பதாக சில கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனிடையே அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனுக்கு சன் டிவியின் சேனல்களுக்கான டிகோடிங் அளிக்கப்படவில்லை என்ற தகவலும் பரவியுள்ளது. இதனால் தாங்கள் விரும்பிய சேனலைப் பார்க்க முடியுமா என்ற சந்தேகத்திற்கு மக்கள் ஆளாகி இருக்கிறார்கள்.
திமுகவின் அதிகாரபூர்வ ஏடான முரசொலி செய்தியாளர் உட்பட யாருக்குமே விழாவுக்கான அழைப்பிதழ் வழங்கப்படவில்லை. இதனால் செய்தியாளர்களால் இதுகுறித்த செய்திகளை முழுமையாகச் சேகரிக்க முடியவில்லை.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications