'தெய்வ குத்தம்'-கிராமே காலியான விநோதம்!
கிருஷ்ணகிரி: 'தெய்வ குற்றம்' காரணமாக கிருஷ்ணகிரி அருகில் உள்ள கொண்டேப்பள்ளி கிராம மக்கள் அனைவரும் தங்களது வீடுகளை ஒரு நாள் காலி செய்தனர்.
கிருஷ்ணகிரியில் சுமார் 10 கி,மீ. தொலைவில் உள்ளது கொண்டேப்பள்ளி.
இந்த கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கிராமத்தில் வசிக்கும் மக்களில் சிலர் கடன் பிரச்சனை, தொழில் நஷ்டம், குடும்ப பிரச்சனை, விபத்து, தற்கொலை போன்ற பல காரணங்களால் அடுத்தடுத்து 10 பேர் தொடர்ந்து இறந்து போனார்கள்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் இப்படி பலரும் இறப்பதற்கு தெய்வ குத்தம் தான் காரணம். அதனால் அனைவரும் வீட்டை விட்டு அருகில் உள்ள ஒரு தோப்பில் தங்குவது என முடிவு செய்தனர்.
அதன்படி அந்த தோப்பில் கிராம மக்கள் அனைரும் தங்கினர். இப்படி செய்தால் தெய்வத்தின் உக்கிரம் குறையும் என்பது கிராம மக்களின் கருத்து.
தோப்பில் மாரியம்மனுக்கு சிறப்பு பூசைகள் செய்யப்பட்டது. பொங்கல்
வைத்து படையல் செய்து வணங்கினர். பின்பு மாலையில் வீடு திரும்பினர்.












Click it and Unblock the Notifications