அதிமுக மாஜி எம்எல்ஏ உறவினர் கைது-சிபிஐ அதிரடி

Subscribe to Oneindia Tamil

நெல்லை: விற்பனை வரி மோசடி செய்த அதிமுக மாஜி எம்எல்ஏவின் உறவினர் கைது செய்யப்பட்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூனம்குளத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். கோவில்பட்டி அதிமுக மாஜி பெண் எம்.எல்.ஏ சியாமளாவின் உறவினரான இவர் அங்குள்ள ஒரு தீப்பெட்டி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார்.

தீப்பெட்டிக்குரிய விற்பனை வரி லேபிள் ஒட்டாமல் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக இவர் மீது வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் பாலகிருஷ்ணன் நீதிமன்றத்தில் ஆஜாராகாமல் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து அவருக்கு சிபிஐ கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

இதற்கிடையில் பாலகிருஷ்ணன் நெல்லையை அடுத்த தேவர் குளத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் பதுங்கியிருப்பதாக சிபிஐக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் நேற்று நெல்லை வந்த சிபிஐ படையினர் மாவட்ட தனிப்பிரிவு போலீசார் உதவியுடன் தேவர்குளம் சென்றனர்.

பின்னர் அங்கு உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த பாலகிருஷ்ணனை கைது செய்து மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+