'அமர்சிங் எபெக்ட்'-பெட்ரோலியத்துறைக்கு புதிய செயலாளர்
டெல்லி: சமாஜ்வாடி கட்சியின் நெருக்குதலால் மத்திய பெட்ரோலியத்துறைச் செயலாளராக ஆர்.எஸ்.பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். இரு தினங்களுக்கு முன் இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
முகேஷ்-அனில் அம்பானி சகோதரரர்கள் மோதலின் எதிரொலியாக இந்த மாற்றம் நடந்துள்ளது.
ரிலையன்ஸ் பெட்ரோலியம் அதிபரான முகேஷுக்கு ஆதரவாக பெட்ரோலிய அமைச்சகம் செயல்படுவதாக குற்றம் சாட்டிய சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளரும் அனிலின் நண்பருமான அமர்சிங், அமைச்சர் முரளி தியோராவையே மாற்ற வேண்டும் என நெருக்குதல் தந்தார்.
ஆட்சியைக் காப்பாற்ற முழுக்க முழுக்க சமாஜ்வாடி கட்சியை சார்ந்துள்ள மத்திய அரசு, அமர்சிங் சொனன நிபந்தனைகளை ஒவ்வொன்றாக ஏற்று வருகிறது.
அந்த வகையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பெட்ரோலியத்துறை செயலாளராக இருந்த ஸ்ரீனிவாசன் மாற்றப்பட்டுள்ளார். இவர் முகேஷுக்கு ஆதரவாக இருந்ததாக அமர்சிங் கூறியுள்ளார்.
வரும் 31ம் தேதி தான் ஸ்ரீனிவாசன் ஓய்வு பெறவுள்ளார். வழக்கமாக இதுபோன்ற உயர் அதிகாரிகள் நியமிக்கப்படும்போது, ஓய்வு பெறுபவர் விலகுவதற்கு இரு நாட்களுக்கு முன்னர் தான் அறிவிப்பு வெளியிடப்படும்.
ஆனால், 31ம் தேதி வரை காத்திருக்காமல் இப்போதே புதிய செயலாளராக பாண்டேவை அறிவித்துவிட்டது மத்திய அரசு.
இதுவரை பாண்டே இரும்புத்துறை செயலாளராக இருந்து வந்தார். 31ம் தேதி தனது பொறுப்பை பாண்டேவிடம் ஒப்படைக்கவுள்ளார் ஸ்ரீனிவாசன்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications