டி.ஆர்.எஸ்சில் பிளவு-காங்.குக்கு எம்பி ஆதரவு
ஹைதராபாத்: மக்களவையில் மத்திய அரசு மீது கொண்டு வரப்படும் நம்பிக்கை தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்கப் போவதாக தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அறிவித்துள்ள நிலையில், அக் கட்சியைச் சேர்ந்த ஒரு எம்பி ஆதரித்து வாக்களிக்கத் தயார் என அறிவித்துள்ளார்.
3 எம்பிக்களைக் கொண்ட இந்தக் கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ், தீர்மானத்தை எதிர்த்து வாக்களிப்பதோடு மாயாவதியுடன் கூட்டு சேரப் போவாதாகவும் அறிவித்திருந்தார்.
இந் நிலையில் அக் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ள்ளது. அந்த கட்சியின் எம்.பிக்களில் ஒருவரான நரேந்திரா ஹைதராபாத்தில் நிருபர்களிடம் பேசுகையில்,
தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்படும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் யாராவது தனக்கு வாக்குறுதி அளித்தால் நம்பிக்கை தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கத் தயார் என அறிவித்துள்ளார்.
இதற்காக 20ம் தேதி வரை காத்திருக்கத் தயார் என்றும் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications