யார் சர்டிபிகேட்டும் தேவையில்லை-சோனியா

ஆந்திர மாநிலம் நெல்லூரில், ராஜீவ் காந்தி ஆரோக்கிய ஸ்ரீ -2 சுகாதாரத் திட்டத்தை இன்று சோனியா காந்தி தொடங்கி வைத்தார். ஆந்திர மாநில அரசு இந்தத் திட்டத்தை செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிக்கும் 6.5 கோடி பேருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும்.
இத் திட்டத்தை நெல்லூர் மாவட்டத்தில் இன்று தொடங்கி வைத்த சோனியா காந்தி, நிகழ்ச்சியில் பேசுகையில், அணு சக்தி பிரச்சினையாக இருந்தாலும் சரி, வெளியுறவுக் கொள்கையாக இருந்தாலும் சரி, நாட்டின் நலனை காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர்களும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். சமரசம் செய்து கொள்ளவும் மாட்டார்கள்.
தேசிய நலனை நாங்கள் சமரசம் செய்து கொண்டுள்ளதாக குற்றம் சாட்டுகிறார்கள். இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தது காங்கிரஸ். அதன் தலைவர்களான இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் இன்னுயிரை தியாகம் செய்தவர்கள்.
அப்படிப்பட்ட பாரம்பரியத்தில் வந்த காங்கிரஸ் கட்சி நாட்டை பலவீனமாக்க ஒருபோதும் சம்மதிக்காது.
இந்த விஷயத்தில் எந்தக் கட்சியும் எங்களுக்கு நற்சான்றிதழ் தரத் தேவையில்லை என்றார் சோனியா காந்தி.












Click it and Unblock the Notifications