40 எம்பி தொகுதிகளிலும் தனித்து போட்டி: சரத்

Subscribe to Oneindia Tamil

காரைக்குடி: நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிட தயார் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

காரைக்குடி வந்த சரத்குமார் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், அணு சக்தி விவகாரத்தில் 123 ஒப்பந்தத்தில் உள்ள நிறை குறைகளை மத்திய அரசு முறையாக விளக்க தவறி விட்டது. அணு சக்தியை எதிர்க்கும் இடதுசாரிகளும் இந்த 123 ஒப்பந்தம் குறித்து விளக்கமாக கூறவில்லை.

எங்களை பொருத்த மட்டில் இந்த ஒப்பந்தத்தை முழுமையாக வரவேற்கிறோம். காரணம், தொழிற்சாலை வளர்ச்சி காரணமாக மின் தேவை அதிகரித்துள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் முக்கியத்துவம் பெறுகிறது. அதனால் நாடு வளர்ச்சி காணும்.

நாட்டில் பண வீக்கம், விலை வாசி உயர்வால் ஏழை நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகின்றனர். விலை வாசியை குறைக்க மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழகத்தில் 6,000 ரவுடிகள் படியலை போலீசார் தயாரித்து இருப்பதாக தெரிகிறது. போலீஸ் மூலம் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாளையே தேர்தல் வந்தால் கூட தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 40 தொகுதிகளிலும் போட்டியிட அ.இ.ச.ம.க. தயாராகவே உள்ளது. தேர்தலை சந்திப்பது குறித்து நிர்வாக குழு கூடி முடிவு செய்யும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+