மின் தட்டுப்பாட்டை நீக்க தொழிற்சாலைகளுக்கு மீண்டும் மின் தடை

சில மாதங்களுக்கு முன்பு மின்சாரத் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் தமிழகத்தை பல மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு நாள் தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அளித்து மின் தட்டுப்பாடு சமாளிக்கப்பட்டது. தற்போது மீண்டும் அந்த மின்சார விடுமுறைத் திட்டத்ைத தமிழக அரசு அறிவித்துள்ளது.
இன்று சென்னையில் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தொழிலதிபர்களுடன் நடத்திய ஆலோசனைக்குப் பின்னர் இதை அறிவித்தார்.
1000 மெகாவாட் பற்றாக்குறை:
இதுகுறித்து ஆற்காடு வீராசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை பொய்த்து விட்டதாலும், காற்றாலை மூலம் குறைந்தஅளவிலான மின்சாரமே உற்பத்தி செய்யப்படுவதாலும், 1000 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையாகியுள்ளது.
இந்த நெருக்கடியை சமாளிக்க தமிழகத்தை ஆறு மண்டலமாக பிரித்து, ஒவ்வொரு மண்டலத்திலும் வாரம் ஒருமுறை ஒரு மணி நேரத்திற்கு மின்தடையை அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த மின் விடுமுறையிலிருந்து, விவசாயிகள், குடிநீர் விநியோகம், பால் பண்ணைகள் ஆகியவற்றுக்கு விலக்கு அளிக்கப்படும்.
இரவில் மின் தடை கிடையாது:
மாணவர்களின் நலன்கருதி இரவு நேரங்களில் மின்சாரம் தடை செய்யப்பட மாட்டாது. அதேபோல கிராமங்களுக்கும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படும்.
காற்றாலை மூலம் 2700 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என அரசு நினைத்திருந்தது. ஆனால் 1800 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது.அதேபோல,நீர் மின் நிலையங்களிலும், பருவ மழை பொய்த்ததால் எதிர்பார்த்த மின் உற்பத்தி இல்லை.
மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு 60 சதவீத மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. ஒரு நாளைக்கு 1000 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளது. இதே நிலைதான் அண்டை மாநிலங்களிலும் நிலவுகிறது,.
மின்சார விடுமுறை காரணமாக, 375 முதல் 400 மெகாவாட் மின்சாரத்ைத சேமிக்க முடியும். மேலும், தொகுப்பு மின்உற்பத்தி மூலம் 500 மெகாவாட் மின்சாரம் பெறமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநகராட்சிகளில் 1 மணி நேரம் - நகராட்சிகளில் 2 மணி நேரம்:
சென்னை, மதுரை, திருச்சி, கோவை மாநகராட்சிகளில் ஒரு மணி நேர மின்சாரத் தடை அமல்படுத்தப்படும். நகராட்சிகளில் 2 மணி நேர மின் தடை அமல்படுத்தப்படும். இதன் மூலம் 300 மெகாவாட் மின்சாரம் மிச்சப்படுத்தப்படும்.
சென்னை மாநகராட்சி எட்டு மண்டலமாக பிரிக்கப்படும். இதில்தினசரி ஒரு மண்டலத்திற்கு ஒருமணி நேரம் மின்தடை அமல்படுத்தப்படும்.
ஆந்திராவுக்கு தமிழகம் பரவாயில்லை:
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் நிலைமை பரவாயில்லை. ஆந்திராவில், பகல் நேரங்களில் விளக்குகள், மின் விசிறிகள், குளிர்சாதனப் பெட்டிகளை பயன்படுத்த வேண்டாம் என்று அந்த மாநில அரசு சமீபத்தில் கோரிக்ைக விடுத்தது. ஆனால் தமிழகத்தில் அப்படிப்பட்ட நிலை இல்லை.
2009-10ம் ஆண்டு வாக்கில், 5000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று தமிழக அரசு எதிர்பார்க்கிறது.
பர்னஸ் ஆயில் மூலம் மின்சாரம் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு வாட் வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதேபோன்ற சலுகையை டீசலைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கும் அளிக்க வேண்டும் என்று தொழிலதிபர்கள் கோரியுள்ளனர். இதுகுறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை.
வரி விலக்கு மூலம் ஏற்படும் இழப்பீட்டை சமாளிக்க இரு தரப்பும் நஷ்டத்ைதப் பகிர்ந்து கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அரசு 60 சதவீத இழப்பையும், தொழிற்சாலைகள் 40 சதவீத இழப்பையும் பகிர்ந்து கொள்ளும். இதுதொடர்பான இறுதி முடிவு முதல்வர் கருணாநிதி, நிதியமைச்சர் அன்பழகன் ஆகியோருடன் கலந்து பேசி எடுக்கப்படும் என்றார் வீராசாமி.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications