நம்பிக்கை வாக்கெடுப்பு: எதிர்த்து வாக்களிக்க அஜீத் சிங் கட்சி முடிவு
{image-Ajit Singh250_20072008.jpg tamil.oneindia.com}டெல்லி: நம்பிக்கை வாக்கெடுப்பில், அரசுக்கு எதிராக வாக்களிக்க 3 எம்.பிக்களை வைத்துள்ள ராஷ்டிரிய லோக்தளம் கட்சி முடிவு செய்துள்ளது. இதனால் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அஜீத் சிங், சிபு சோரன், தேவே கெளடா ஆகியோரின் (மொத்தமாக சேர்த்து 11 எம்.பிக்கள் உள்ளனர்) கட்சிகளை காங்கிரஸ் கட்சி பெரிதும் நம்பியுள்ளது. இதில் சிபு சோரன் அரசை ஆதரிப்பார் என்பது உறுதியாகியுள்ளது. கெளடா இன்னும் தனது முடிவை அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் அஜீத் சிங் அரசுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளார். இது காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை ராஷ்டிரிய லோக்தளம் கட்சியின் எம்.பிக்கள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்குப் பின்னர் அஜீத் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது கட்சி எம்.பிக்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடன் பேசிய பின்னர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானிக்கப்பட்டது.
கட்சியினரின் கருத்தும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று இருந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றார்.
அஜீத் சிங்கை சமீபத்தில்தான் இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அஜீத்சிங், அரசுக்கு எதிராக திரும்பியுள்ளது, ஐக்கிய முற்போக்குக்கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
-
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
நாதக கூட்டத்தில் ஒலித்த டிவிகே கோஷம்.. டீயாடா விக்கிறாய்? தற்குறிகள்! டென்ஷனான சீமான்..ஒரே பரபரப்பு -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications