நம்பிக்கை தீர்மானம்-வாக்கெடுப்பு நடப்பது எப்படி?
டெல்லி: லோக்சபாவில் பிரதமர் மன்மோகன் சிங் அரசு கொண்டு வரும் நம்பிக்கை தீர்மானம் மீதான வாக்கெடுப்பு மின்னணு முறையில் நடைபெறவுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் இன்று லோக்சபாவில் தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்கிறார். இதன் மீது விவாதம் நடந்து நாளை மாலை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
வாக்கெடுப்பு மின்னணு முறையில் நடைபெறும். ஒவ்வொரு உறுப்பினரின் இருக்கைக்கு முன்பும் இரு நிறத்திலான பொத்தான்கள் வைக்கப்பட்டிருக்கும். அவை பச்சை மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும்.
தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்க விரும்பினால் பச்சை நிற பொத்தானை அழுத்த வேண்டும். எதிர்ப்பு ெதரிவிப்பதாக இருந்தால் சிவப்பு பொத்தானை அழுத்த வேண்டும்.
ஒருவேளை மறதியாகவோ அல்லது தெரியாமலோ வேறு பொத்தானை அழுத்தி விட்டால், சபாநாயகரிடமிருந்து துண்டுச் சீட்டை வாங்கி, அதிலும் தங்களது வாக்கைப் பதிவு செய்யலாம்.
பொத்தானை அழுத்தி அனைவரும் வாக்களித்த பின்னர் பதிவான வாக்குகள் விவரத்தை டிஜிட்டல் போர்டு காட்டும். அதை வைத்து தீர்மானம் வெற்றி பெற்றதா இல்லையா என்பதை சபாநாயகர் அறிவிப்பார்.
வாக்கு வித்தியாசம் பெரிதாக இருந்தால் துண்டுச் சீட்டுக்கள் கணக்கில் எடுக்கப்பட மாட்டாது. மாறாக குறைவாக இருந்தால் துண்டுச் சீட்டுகளில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு பின்னர் முடிவு அறிவிக்கப்படும்.
வாக்கெடுப்பு நடைபெறும் போது லோக்சபாவுக்குள் எம்.பிக்கள் மட்டுமே இருப்பார்கள். பார்வையாளர்கள் யாரும் லோக்சபாவில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். நாடாளுமன்ற லாபியிலும் கூட யாரும் இருக்க அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications