சமாஜவாதியின் தொடரும் துரோகம்:சிபிஎம்
டெல்லி: நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு தோற்றால், அணு ஒப்பந்தத்தை நிறைவேற்ற எந்த முயற்சியையும் மேற்கொள்ளக் கூடாது. முயன்றால் மக்கள் புரட்சி வெடிக்கும் என்று மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் எச்சரித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு இரண்டு நாள் கூட்டம் டெல்லியில் நடந்தது.
கூட்டத்துக்கு பிறகு பிரகாஷ்கரத் கூறியதாவது:
மத்திய அரசும், அணுசக்தி ஒப்பந்தமும் 22ம் தேதி தண்டனைக்குள்ளாவது உறுதி. நம்பிகை வாக்கெடுப்பு முடிந்த பிறகுதான் சர்வதேச அணுசக்தி கழகத்துடன் மேற்கொண்டு பேசுவோம் என்று மத்திய அரசு உறுதியளித்திருந்தது.
ஆனால் தற்போது வியன்னாவில் இந்திய அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். இது பச்சை துரோகம். ஏற்கனவே நாடாளுமன்றத்துக்கு தெரியாமல் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டனர். இப்போது பகிரங்கமாக அளித்த வாக்குறுதியை காப்பாற்ற மறுக்கிறார்கள்.
புஷ்ஷூக்கு விசுவாசமாக நடந்து கொள்வது மட்டுமே அவர்களது நோக்கம். தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எம்பிக்களை அதிகாரத்தையும், பணத்தையும் கொண்டு விலைக்கு வாங்குவதில் காங்கிரஸூம் சமாஜவாதியும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக குற்றம் நிரூபிக்கப்பட்ட கிரிமினல்களை கூட (எம்பிக்கள்) அவர்கள்
விட்டுவைக்கவில்லை. இது வெட்ககேடு.
சமாஜவாதியின் தொடரும் துரோகம்:
சமாஜவாதி கட்சி நாட்டுமக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது. அணு ஒப்பந்தத்திலும் மத்திய அரசுக்கு ஆதரவு அளிப்பதிலும் அக்கட்சி 3வது முறையாக துரோகம் செய்துள்ளது.
சமாஜவாதி, நாட்டு மக்களுக்கு துரோகம் செய்வது ஒன்றும் புதிதல்ல. கடந்த 1999ம் ஆண்டு பாஜவை எதிர்த்து மதசார்பற்ற கட்சிகள் ஒன்று திரண்டபோது, சமாஜவாதி மட்டும் பாஜவை ஆதரித்து அக்கட்சி தலைமையிலான அரசு அமைய காரணமாக இருந்தது.
பின்னர் 2002ல் கே.ஆர்.நாராயணனை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க இடதுசாரிகளுடன் இணைந்து செயல்பட சமாஜவாதி சம்மதித்தது. ஆனால் கடைசி நேரத்தில் பாஜவுடன் சேர்ந்து கொண்டு அப்துல் கலாமை ஆதரித்தது.
இப்போது அணு ஒப்பந்த விவகாரத்தில் 3வது முறையாக துரோகம் செய்துள்ளது. ஒப்பந்தத்தை எதிர்க்கும்படி சமாஜவாதியை நாங்கள் ஒருபோதும் கேட்கவில்லை. அவர்களாகவே நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் ஒப்பந்தத்தை எதிர்த்து பிரசாரம் செய்தனர். அவை நாடாளுமன்ற குறிப்புகளில் கூட உள்ளன.
இப்போது திடீரென்று காங்கிரஸூடன் சேர்ந்து கொண்டு அமெரிக்காவையும், அணு ஒப்பந்தத்தையும் ஆதரிக்கின்றன.
ஒருகாலத்தில் உத்தரபிரதேசத்தில் மதசார்பற்ற அணியை வழிநடத்திய சமாஜவாதி கட்சி, தற்போது தனக்குரிய அரசியல் இடத்தை இழந்துவிட்டது.
அமெரிக்காவை எதிர்த்து பேசுவதற்கு பதிலாக நாட்டு மக்களுக்கு அக்கட்சி துரோகம் செய்து வருகிறது. அதற்கு அவர்கள் கண்டிப்பாக பதில் சொல்லியேத் தீர வேண்டும் என்று காரசாரமாக அக்கட்சியை குற்றம் சாட்டினார் காரத்.
-
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
மார்க்சிஸ்ட் அரசியல் வரலாற்றில் முதன்முறை! மதுரையில் போட்டியிடாத சிகப்பு சட்டை தோழர்கள்! என்னாச்சு? -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?











Click it and Unblock the Notifications