சமாஜவாதியின் தொடரும் துரோகம்:சிபிஎம்
டெல்லி: நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு தோற்றால், அணு ஒப்பந்தத்தை நிறைவேற்ற எந்த முயற்சியையும் மேற்கொள்ளக் கூடாது. முயன்றால் மக்கள் புரட்சி வெடிக்கும் என்று மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் எச்சரித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு இரண்டு நாள் கூட்டம் டெல்லியில் நடந்தது.
கூட்டத்துக்கு பிறகு பிரகாஷ்கரத் கூறியதாவது:
மத்திய அரசும், அணுசக்தி ஒப்பந்தமும் 22ம் தேதி தண்டனைக்குள்ளாவது உறுதி. நம்பிகை வாக்கெடுப்பு முடிந்த பிறகுதான் சர்வதேச அணுசக்தி கழகத்துடன் மேற்கொண்டு பேசுவோம் என்று மத்திய அரசு உறுதியளித்திருந்தது.
ஆனால் தற்போது வியன்னாவில் இந்திய அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். இது பச்சை துரோகம். ஏற்கனவே நாடாளுமன்றத்துக்கு தெரியாமல் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டனர். இப்போது பகிரங்கமாக அளித்த வாக்குறுதியை காப்பாற்ற மறுக்கிறார்கள்.
புஷ்ஷூக்கு விசுவாசமாக நடந்து கொள்வது மட்டுமே அவர்களது நோக்கம். தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எம்பிக்களை அதிகாரத்தையும், பணத்தையும் கொண்டு விலைக்கு வாங்குவதில் காங்கிரஸூம் சமாஜவாதியும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக குற்றம் நிரூபிக்கப்பட்ட கிரிமினல்களை கூட (எம்பிக்கள்) அவர்கள்
விட்டுவைக்கவில்லை. இது வெட்ககேடு.
சமாஜவாதியின் தொடரும் துரோகம்:
சமாஜவாதி கட்சி நாட்டுமக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது. அணு ஒப்பந்தத்திலும் மத்திய அரசுக்கு ஆதரவு அளிப்பதிலும் அக்கட்சி 3வது முறையாக துரோகம் செய்துள்ளது.
சமாஜவாதி, நாட்டு மக்களுக்கு துரோகம் செய்வது ஒன்றும் புதிதல்ல. கடந்த 1999ம் ஆண்டு பாஜவை எதிர்த்து மதசார்பற்ற கட்சிகள் ஒன்று திரண்டபோது, சமாஜவாதி மட்டும் பாஜவை ஆதரித்து அக்கட்சி தலைமையிலான அரசு அமைய காரணமாக இருந்தது.
பின்னர் 2002ல் கே.ஆர்.நாராயணனை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க இடதுசாரிகளுடன் இணைந்து செயல்பட சமாஜவாதி சம்மதித்தது. ஆனால் கடைசி நேரத்தில் பாஜவுடன் சேர்ந்து கொண்டு அப்துல் கலாமை ஆதரித்தது.
இப்போது அணு ஒப்பந்த விவகாரத்தில் 3வது முறையாக துரோகம் செய்துள்ளது. ஒப்பந்தத்தை எதிர்க்கும்படி சமாஜவாதியை நாங்கள் ஒருபோதும் கேட்கவில்லை. அவர்களாகவே நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் ஒப்பந்தத்தை எதிர்த்து பிரசாரம் செய்தனர். அவை நாடாளுமன்ற குறிப்புகளில் கூட உள்ளன.
இப்போது திடீரென்று காங்கிரஸூடன் சேர்ந்து கொண்டு அமெரிக்காவையும், அணு ஒப்பந்தத்தையும் ஆதரிக்கின்றன.
ஒருகாலத்தில் உத்தரபிரதேசத்தில் மதசார்பற்ற அணியை வழிநடத்திய சமாஜவாதி கட்சி, தற்போது தனக்குரிய அரசியல் இடத்தை இழந்துவிட்டது.
அமெரிக்காவை எதிர்த்து பேசுவதற்கு பதிலாக நாட்டு மக்களுக்கு அக்கட்சி துரோகம் செய்து வருகிறது. அதற்கு அவர்கள் கண்டிப்பாக பதில் சொல்லியேத் தீர வேண்டும் என்று காரசாரமாக அக்கட்சியை குற்றம் சாட்டினார் காரத்.
-
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது












Click it and Unblock the Notifications