புலிகளின் முக்கிய தளம் பிடிபட்டது: இலங்கை ராணுவம்
கொழும்பு: மன்னார்அருகே உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய தீவை கைப்பற்றியுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் பாதுகாப்புப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்துவருகிறது. பலர் உயிரிழந்து வருகின்றனர். புலிகள் வசம் இருந்த பகுதிகளை மீட்டு வருவதாக ராணுவம் அவ்வப்போது தெரிவித்து வருகிறது.
சமீபத்தில் மன்னார் பகுதியில்உள்ள, விடுதலைப் புலிகள் வசம் பல வருடங்களாக இருந்து வந்த விடத்தல் தீவு என்கிற முக்கிய கடற்படைத் தளத்தை மீட்டதாக ராணுவம் அறிவித்தது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள இலுப்பைக் கடவு நகரத்தை மீட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த நகரம் கடந்த 21 வருடங்களாக புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
விடத்தல் தீவு அருகில்தான் இந்த இலுப்பை கடவு உள்ளது. இந்த தளம் மீட்கப்பட்டுள்ளதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து புலிகள் தரப்பிலிருந்து எந்தத் தகவலும் இல்லை.












Click it and Unblock the Notifications