குமரியில் கடல் உள் வாங்கியதால் படகு போக்குவரத்து நிறுத்தம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் தொடர்ந்து 2வது நாளாக கடல் உள் வாங்கியதால் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் தவிப்புக்குள்ளாகினர்.
சுனாமி தாக்குதலுக்குப் பிறகு தமிழக கடல் பகுதிகளில் அடிக்கடி கடல் கொந்தளிப்பும், உள் வாங்குதலும் சகஜமாகி விட்டது. அதேபோல அடிக்கடி கடல் நீர் ஊருக்குள் நுழைவதும் வழக்கமாகியுள்ளது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக குமரி கடலில் கடல் நீர் உள் வாங்கியதால் படகுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடலில் உள்ள பாறையில் அமைந்திருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு சென்று பார்க்க பூம்புகார் கப்பல் நிறுவனம், படகு போக்குவரத்ைத நடத்தி வருகிறது.காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த படகு சவாரி இருக்கும்.
நேற்று முன்தினம் கடல் பிற்பகல் வாக்கில் உள்வாங்கியதால் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் நிலைமை சரியானதும் படகு சவாரி தொடங்கியது.
இந்த நிலையில் நேற்றும் கடல் உள் வாங்கியது. நேற்று காலை 8 மணிக்கு வழக்கம் போல் படகு போக்குவரத்து தொடங்கியது. ஆனால் 8.30 மணி அளவில் திடீரென்று கடல் நீர் உள்வாங்கியது. இதனால் பாறை பகுதியில் நீர் மட்டம் குறைந்தது. இதனால் படகை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அப்போது ஏற்கனவே படகில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சென்ற சுமார் 100 சுற்றுலாப்பயணிகள் கரைக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். கடல் மட்டம் சீரானதைத்தொடர்ந்து சுமார் 2 மணி நேர இடைவெளிக்குப் பிறகு படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. பின்னர் விவேகானந்தர் மண்டபத்தில் தவித்தவர்கள் கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!












Click it and Unblock the Notifications