இரவு 10 மணி வரை நீடித்த விவாதம்-இன்று மாலை வாக்கெடுப்பு
Subscribe to Oneindia Tamil

பிரதமர் மன்மோகன் சிங் நேற்று காலை லோக்சபாவில் நம்பிக்கை கோரும் ஒரு வரிதீர்மானத்தை கொண்டு வந்தார். இதையடுத்து அரசின் சாதனைகள், நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வர காரணமாக இருந்த சூழ்நிலைகள் உள்ளிட்டவற்றை விளக்கிப் பேசினார். பிறகு கட்சித் தலைவர்களின் விவாதம் தொடங்கியது.
அத்வானி விவாதத்தை ஆரம்பித்து வைக்க பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அனல் பறக்கும் பேச்சை கொடுத்தனர்.
இந்த விவாதம் நேற்று இரவு 10மணி வரை நீடித்தது. இன்றும் விவாதம் தொடருகிறது. மாலை வரை நடைபெறும் விவாதத்திற்குப் பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் பதிலுரை நிகழ்த்துவார். இதைத் தொடர்ந்து 5 மணி வாக்கில் வாக்கெடுப்பு நடைபெறும்.












Click it and Unblock the Notifications