தங்ககாசு மோசடி-திமுக பிரமுகர் மீது குற்றச்சாட்டு
தர்மபுரி: தங்ககாசு வழங்குவதாக கூறி மோசடி செய்த திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தர்மபுரியில் பொது மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
தர்மபுரி மாவட்டம், வேலரஹள்ளி பஞ்சாயத்து முன்னாள் திமுக தலைவராக இருந்தவர் சேகர். இவர் சேமிப்பு மற்றும் தங்ககாசு வழங்கும் திட்டத்தை நடத்துவதாக கூறி அருகில் உள்ள கிராமங்களில் சுமார் 300க்கும் மேற்பட்டோரிடம் பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
குறிப்பிட்ட தேதியில் அவர் கூறியபடி தங்ககாசும் வழங்கவில்லை, பணத்தையும் திருப்பி தரவில்லை என்று கூறி பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று திரண்டு தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தை முற்றுகையி்ட்டனர்.
தகவல் அறிந்த காவல் துறை உயரதிகாரிகள் விரைந்து வந்து பொது மக்களை சமரசம் செய்தனர். சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications