வாக்கெடுப்பு ஓவர்-அடுத்து அமைச்சரவை மாற்றம்?
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்வதற்காக பல்வேறு கட்சிகள், சுயேச்சை எம்.பிக்களின் ஆதரவை காங்கிரஸ் வாங்கியது. இதற்காக பல உறுதிமொழிகளையும் அது அளித்துள்ளது. அதில் முக்கியமானது, சிலருக்கு அமைச்சர் பதவி அளிப்பதாக அளித்த உறுதிமொழி.
குறிப்பாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரனுக்கு கேபினட் பதவி, அக் கட்சியைச் சேர்ந்த இன்னொருவருக்கு இணை அமைச்சர் பதவி தருவதாக காங்கிரஸ் வாக்களித்துள்ளது. அதேபேல வேறு சிலருக்கும் அமைச்சர் பதவி தரப்படும் எனத் தெரிகிறது.
தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்து விட்டதால் அடுத்தபடியாக அமைச்சரவை மாற்றம் நடைபெறும் எனத் தெரிகிறது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரன், நிலக்கரித்துறை அமைச்சராக நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது.
இவர் தவிர வேறு சிலரும் அமைச்சரவையில் இடம் பெறக் கூடும். சமாஜ்வாடிக் கட்சிக்கு அமைச்சர் பதவி தரப்படுமா என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை.
ஆதரவு எம்.பிக்களைப் பிடிக்கும் முயற்சியில் சில காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். எனவே அவர்களைக் கெளரவிக்கும் வகையில் அவர்களுக்கும் அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.