Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லஞ்சம்-சபாநாயகரிடம் வீடியோ தரும் சிஎன்என்-ஐபிஎன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஜக எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதை சி.என்.என்-ஐ.பி.என் தொலைக்காட்சி ரகசியமாக வீடியோ எடுத்துள்ளது. இந்த வீடியோவை சபாநாயகரிடம் அந்த டிவி நிறுவனம் வழங்கவுள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுவதற்காக பகன்சிங் குலாஸ்தி, மகாவீர் பகோரா, அசோக் அர்கல் ஆகிய 3 பாஜக எம்.பிக்களுக்கு சமாஜ்வாடி கட்சியின் சார்பில் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தப் பணத்தை அந்த மூன்று எம்பிக்களும் நாடாளுமன்றத்தில் வந்து கொட்டி பரபரப்பை ஏற்படுத்தினர்.

அவர்கள் கூறுகையில்,

ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருக்க எங்களுக்கு ஒரு கோடி ரூபாய் முன் பணமாக கொடுக்கப்பட்டது. ஓட்டெடுப்பு முடிந்த பிறகு மீதிப் பணம் ரூ. 8 கோடி தரப்படும் என்று உறுதிமொழி தரப்பட்டது.

இந்த லஞ்சப் பணத்தை சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் மற்றும் அக் கட்சியைச் சேர்ந்த ரியோதி ராமன்சிங் ஆகியோர் கொடுத்ததனர்.

இந்தப் பணத்தை கொடுக்க திங்கள்கிழமை எங்களை தொடர்பு கொண்டார்கள். லீ மெரிடியன் ஓட்டலுக்கு வாருங்கள், அங்கு இந்த பேரத்தை வைத்துக் கொள்ளலாம் என்று எங்களிடம் தெரிவித்தனர். ஆனால் அங்கு வைத்து எங்களிடம் எந்த பேரமும் நடக்கவில்லை.

பின்னர் சமாஜ்வாடி கட்சியின் எம்.பி. ரியோதி ராமன்சிங் பகல் 12.30 மணிக்கு பெரோசா சாலையில் உள்ள அசோக் அர்கல் வீட்டுக்கு வந்து எங்களை சந்தித்தார். அமர்சிங் வீட்டுக்கு வாருங்கள், அங்கு வைத்து பேசுவோம் என்றார்.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை காங்கிரஸ் எம்.பி.யும், சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகருமான அகமது பட்டேல் இந்த பேரம் குறித்து தொலைபேசியில் எங்களுடன் பேசினார்.

அதன் பின்னர் நாங்கள் 3 பேரும் ரியோதி ராமன்சிங்குடன் அமர்சிங் வீட்டுக்குச் சென்றோம். அங்கு அமர்சிங் எங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் வீதம் 3 கோடி ரூபாய் முன் பணமாக கொடுத்தார்.

ஆனால் நாங்கள் அந்தப் பணத்தை வாங்க மறுத்து விட்டோம். அந்தப் பணத்தை அசோக் அர்கல் வீட்டுக்கு கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என்று கூறி விட்டோம்.

20 நிமிடம் கழித்து அசோக் அர்கல் வீட்டுக்கு ஒருவர் 2 பைகள் நிறைய ரூபாய் நோட்டு கட்டுகளை எடுத்து வந்து மேஜையில் வைத்தார். பைகளில் இருப்பது உண்மையான ரூபாய் நோட்டுகளா அல்லது கள்ள நோட்டுகளா திறந்து காட்டு என்று அந்த நபரிடம் கூறினேன். உடனே அவர் ஒரு கோடி ரூபாயை ரொக்கமாக எடுத்து வைத்தார்.

அப்போது அமர்சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அந்த நபர் எங்களிடம் திரும்பி இந்தப் பணம் முன் பணம்தான் என்று கூறினார். இந்த முழு நாடகத்தையும் நிரூபிக்கும் வீடியோ டேப் (சிஎன்என்-ஐபிஎன் டேப்) ஆதாரம் உள்ளது என்றனர்.

ஒளிபரப்ப மாட்டோம்:

ஆனால், அதை சிஎன்என்-ஐபிஎன் ஒளிபரப்பவில்லை. மாறாக அந்த வீடியோ காட்சிகள் அடங்கிய சிடியை அந்த தொலைக்காட்சியின் நிர்வாகியும் தலைமை ஆசிரியருமான ராஜ்தீப் சர்தேசாய் சபாநாயர் சோம்நாத் சட்டர்ஜியிடம் அளிக்கப் போவதாக அறிவித்துவிட்டார்.

இது குறித்து ராஜ்தீப் கூறுகையில், எங்கள் சேனலின் இரண்டு நிருபர்கள் இந்த காட்சிகளை ரகசியமாக படம் பிடித்தனர். எந்தவொரு அரசியல் யுத்தத்திலும் எங்கள் சேனல் ஈடுபடவில்லை. பொது நலன் கருதியே தன்னிச்சையாக அதை பதிவு செய்தோம்.

அதை விரைவில் சபாநாயகரிடம் கொடுப்போம். சபாநாயகர் அனுமதி இல்லாமல் அந்த காட்சிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப மாட்டோம். அப்படி ஒளிபரப்பினால் அது உரிமை மீறல் பிரச்னையாகி விடும் என்றார்.

ஆனால், இந்த வீடியோவில் ஒரு நபர் வந்து தங்களிடம் பணத்தை எடுத்து வைத்தது தான் பதிவாகியுள்ளது என மூன்று எம்பிக்களும் கூறியுள்ளனர். இதனால் அந்த நபருக்கும் ரியோதி ராமன்-அமர்சிங்கு இடையே இந்த வீடியோ எப்படி முடிச்சு போடும் என்று தெரியவி்ல்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+