புதுச்சேரி கவர்னரானார் கோவிந்த சிங்
புதுச்சேரி: புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுனராக ராஜஸ்தானைச் சேர்ந்த கோவிந்த சிங் குஜ்ஜார் இன்று காலை பதவியேற்று கொண்டார். அவருக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார்.
புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுனராக இருந்த முகுத்மிதி ராஜினாமா செய்துவிட்டு அவரது சொந்த மாநிலமான அருணாசலப் பிரதேசத்திற்கு சென்றார். மீண்டும் அவர் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளார்.
இதையடுத்து அந்தமான்-நிகோபார் ஆளுனர் போபிந்தர் சிங், புதுவை மாநில துணை நிலை ஆளுனர் பொறுப்பை கூடுதலாக வகித்து வந்தார்.
இந் நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நசீராபாத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான கோவிந்த் சிங் குர்ஜார் புதுச்சேரியின் 19வது துணை நிலை ஆளுனராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு நேற்றிரவு புதுச்சேரிக்கு வந்தார்.
இன்று காலை துணை நிலை ஆளுநராக அவர் பொறுப்பேற்றார்.
தலைமை செயலாளர் பொறுப்பு வகிக்கும் நைனி ஜெயசீலன், புதுவை மாநில துணை நிலை ஆளுனராக கோவிந்த் சிங் குர்ஜார் நியமிக்கப்பட்டிருப்பதற்கான ஜனாதிபதியின் உத்தரவை வாசித்தார். இதைத்தொடர்ந்து புதிய துணை நிலை ஆளுனருக்கு தலைமை நீதிபதி கிருஷ்ண ராஜா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.












Click it and Unblock the Notifications