சத்துணவு: காமராஜர் பெயர்-காங்கிரஸ் கோரிக்கை
திருச்சி: சத்துணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர் வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் சேவா தளம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருச்சியில் காங்கிரஸ் சேவா தள மாநில தலைவர் செல்வராஜ் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது
மத்திய அரசு அணுசக்தி கொள்கையில் உறுதியாக உள்ளது. அணு ஒப்பந்தம் மூலமே நாட்டின் மின் பற்றாக்குறையை சரி செய்ய இயலும். நாடு முழுமைக்கும் 2 லட்சத்து 55 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் உற்பத்தியோ ஒரு லட்சத்து 9,000 மட்டுமே செய்யப்படுகிறது.
இந்த பற்றாக்குறையை சரி செய்யவும், இந்திய நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவும், பொருளாதார வளர்ச்சி பெறவும் அணு சக்தி ஒப்பந்தம் மிகவும் அவசியம்.
தற்போது விரிவுபடுத்தப்படுள்ள சத்துணவு திடத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும். இது குறித்து தமிழக முதல்வர் கருணாநிதியிடம் நேரில் வலியுறுத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications