For Daily Alerts
Just In
தூத்துக்குடி-240 இலவச டிவிகள் தீயில் நாசம்
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே மறவன்மண்டபம் கிராமத்தில் பொதுமக்களுக்குக் கொடுக்க வைக்கப்பட்டிருந்த 240 இலவச டிவி பெட்டிகள் தீயில் எரிந்து நாசமானது. இது சதிச் செயலா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மறவன் மண்டபம் பஞ்சாயத்துக்குட்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்குவதற்காக பஞ்சாயத்து அலுவலகத்தில் 240கலர் டிவி பெட்டிகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.
நேற்று இரவு இந்த அலுவலகத்தி திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில் அனைத்து டிவி பெட்டிகளும் எரிந்து நாசமாகி விட்டன. தீயணைப்புப் படையினருக்கு தகவல் போய் அவர்கள் வருவதற்குள் அனைத்தும் எரிந்து போய் விட்டது.
விஷமிகள் சிலர்தான் பஞ்சாயத்து அலுவலகத்திற்குத் தீ வைத்திருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
Comments
Story first published: Friday, July 25, 2008, 18:06 [IST]