இலங்கையிலிருந்து 19 அகதிகள் ராமேஸ்வரம் வருகை
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: இலங்கையிலிருந்து 7 குழந்தைகள் உள்பட 19 அகதிகள் ராமேஸ்வரம் வந்துள்ளனர்.
கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 7 குழந்தைகள் உள்பட 19 பேர் இரண்டு பிரிவாக அரிச்சமுனைக்கு வந்து சேர்ந்தனர். பெரும் தொகை கொடுத்து கள்ளப் படகில் ஏறி இவர்கள் தமிழகம் வந்து சேர்ந்துள்ளனர்.
அவர்களிடம் மாநில மற்றும் மத்திய புலனாய்வுப் படையினர் விசாரணை நடத்திய பின்னர் மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த சில மாதங்களாகவே இலங்கையிலிருந்து வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. அங்கு விடுதலைப் புலிகளுக்கு எதிராக ராணுவத்தினர் எடுத்து வரும் தீவிர நடவடிக்கை காரணமாக அகதிகள் வருகை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications