ரூ. 5,000 லஞ்சம்-அரசு இன்ஜினியர் கைது
தென்காசி: வீட்டு வசதி வாரியத்துக்காக செய்த பணிகள் குறித்த மதிப்பீட்டைத் தர காண்டிராக்டரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வீட்டு வசதி வாரிய இஞ்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை பெருமாள்புரம் பொன்னகரைச் சேர்ந்தவர் ராஜூ மகன் சங்கர பாண்டியன். இவர் தென்காசி ஹவுசிங் போர்டு இன்ஜினியராகப் பணியாற்றி வருகிறார்.
தென்காசி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே 102 பிளாட் அமைக்கும் பணி உள்ளிட்ட சில பணிகள் நடந்து வருகிறது.
இப்பணியை பாவூர்சத்திரம் குருசாமிபுரத்தைச் சேர்ந்த ராஜன் என்பவர் கண்டரக்டர் எடுத்து நடத்தி வருகிறார். நடந்து முடிந்த பணிகள் குறித்து அளவீடு செய்து தொகை நிர்ணயம் செய்ய இன்ஜினியர் சங்கரபாண்டியன் சென்றுள்ளார்.
அப்போது ராஜனிடம் தனக்கு 10 ஆயிரம் தந்தால்தான் பணி குறித்து அளவீடு செய்து தொகை பெறுவதற்கு பரிந்துரை செய்ய முடி்யும் என கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜன் இதுகுறித்து நெல்லை லஞ்ச ஓழிப்பு போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து லஞ்ச ஓழிப்பு ஏடிஎஸ்பி பெருமாள்சாமி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் எஸ்கால் ராஜி, ஏட்டுகள் சங்கரன், நயினார், சுவாமிநாதன், முருகன், நாகராஜன் ஆகியோர் தென்காசி ஹவுசிங் போர்டு காலனி அருகே மறைந்திருந்தனர்.
லஞ்ச ஓழிப்பு போலீசார் கெமிக்கல் தடவி கொடுத்த ரூ.5 ஆயிரத்தை ராஜன் சங்கர சுப்பிரமணியனிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஓழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாகப் பிடித்தனர்.












Click it and Unblock the Notifications