ரயில் வரும் நேரத்தில் அமைச்சருக்காக கேட் திறப்பு!

அதிமுக ஆட்சி காலத்தில் இயக்கி நிறுத்தப்பட்ட 11 வழித்தடங்களில் மீண்டும் பேருந்துகள் இயக்கும் விழா தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் கலந்து கொண்டு பேருந்துகளை இயக்கி வைத்து விட்டு இரவு 8.30 மணிக்கு குற்றாலத்திற்கு திரும்பினார்.
அப்போது தென்காசி ரயில்வே கேட் அருகே ரயில் வந்து கொண்டிருந்ததால் கேட் மூடப்பட்டது. இதனால் போக்குரவத்து துறை அமைச்சர் என்.கே.நேரு, முன்னாள் அமைச்சர் பூங்கோதை, சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பசாமி பாண்டியன், அப்பாவு, பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டவர்கள் வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன.
சுமார் 10 நிமிடம் சிவப்பு விளக்கு சுழன்றபடி சைரன் ஓலித்தும் கேட் கீப்பர் 8.30 வரை கேட் திறக்கவில்லை. உடனே அதிகாரிகள் சிலர் ஓடோடிச் சென்று கேட் கீப்பரிடம் கூறவே அவர் வேறு வழியின்றி கேட்டை திறந்து அமைச்சர் வாகனத்திற்கு வழிவிட்டார்.
அமைச்சராகவே இருந்தாலும் ரயில் வரும் நேரத்தில் கேட் திறப்பது சரிதானா?












Click it and Unblock the Notifications