For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அகமதாபாத் நகரில் ராணுவம் கொடி அணிவகுப்பு

By Staff
Google Oneindia Tamil News

அகமதாபாத்: தொடர் குண்டுவெடிப்பு நடந்த அமகதாபாத் நகரின் முக்கிய பகுதிகளில் இன்று ராணுவ கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

இதுகுறித்து அகமதாபாத் நகர காவல்துறை கூடுதல் ஆணையர் மோகன் ஜா கூறுகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. நகரின் பதட்டமான பகுதிகளில் அவர்கள் கொடி அணிவகுப்பை நடத்தியுள்ளனர்.

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து மதக் கலவரம் மூளும் வாய்ப்பு இருப்பதால் ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களின் உடல்கள் படிப்படியாக அவர்களது உறவினர்களிடம் வழங்கப்பட்டு வருகின்றன. இறுதிச் சடங்குகளின் போதுகலவரம் மூளாமல் தடுக்க உரிய நடவடிக்ைககள் எடுக்கப்பட்டுள்ளன.

தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. எந்தவித அசம்பாவித சம்பவமும் இதுவரை நடைபெறவில்லை என்றார்.

வதோதராவில் உஷார் நிலை:

இதற்கிடையே, வதோதார நகரில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்தநகர காவல்துறை ஆணையர் ராகேஷ் அஷ்தானா கூறியுள்ளார்.

நகரின் முக்கியப் பகுதிகள், விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றில் உச்சகட்ட பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், நகரின் எல்லைப் பகுதிகளில் சோதனைச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X