ஜார்க்கண்ட்டிலும் குண்டுவெடிப்பு-நக்ஸல்கள் கைவரிசை?
Subscribe to Oneindia Tamil

ஜார்க்கண்ட் மாநிலம் கோடா நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் இன்று அதிகாலை இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. இதனால் அங்கு பீதி ஏற்பட்டது.
இந்த குண்டுவெடிப்பில் 5 பேர் காயமடைந்தனர். அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இது குறைந்த சக்தி கொண்ட நாட்டு வெடிகுண்டு என போலீஸார் தெரிவித்துள்ளனர். இதற்கு நக்சலைட்டுகள் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் அகமதபாத், பெங்களூர் தொடர் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து நடந்துள்ளதால், தீவிரவாதிகள் சதியா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத் தலைவர் ராஞ்சி உள்பட அனைத்து நகரங்களிலும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications