தீவிரவாத தாக்குதல்: டிஜிபிக்கள் கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு
டெல்லி: பெங்களூர், அகமதாபாத் என அடுத்தடுத்து தீவிரவாதிகள் வெறிச் செயலில ஈடுபட்டிருப்பதையடுத்து அனைத்து மாநில காவல்துறை தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி தீவிரவாத தடுப்பு நடவடிக்கைள் குறித்து மத்திய அரசு விவாதிக்கவுள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு நாட்டுக்கு தீவிரவாதிகள் பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளனர். அடுத்தடுத்து இரு பெரும் நகரங்களில் இதுபோல தொடர் குண்டுவெடிப்புகள் நடந்திருப்பது மத்திய அரசுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை முறியடிக்கவும், இதுபோன்ற சம்பவங்களை எதிர்காலத்தில் தடுப்பது தொடர்பாகவும் விவாதிக்க அனைத்து மாநில காவல்துறை தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அகமதாபாத்தில் மருத்துவமனைகளிலும், அவசர சிகிச்சைப் பிரிவுகளிலும் தாக்குல் நடத்தியிருப்பதைப் பார்க்கும்போது ஈராக்கில் அல் கொய்தா தீவிரவாதிகள் செயல்படுவதை நினைவுபடுத்துவதாக குஜராத் போலீஸார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications