அதிகாரிகளுடன் சிவராஜ் பாட்டீல் ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பெங்களூர், அகமதாபாத் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலைமை குறித்தும், நாட்டின் பாதுகாப்பு குறித்தும், பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சரவை செயலாளர் கே.எம். சந்திரசேகர், உள்துறை செயலாளர் மதுகர் குப்தா, ஐபி இயக்குநர் பி.சி. ஹல்தார், டெல்லி காவல்துறை டிஜிபி தாத்வால் மற்றும் உள்துறை மற்றும் பாதுகாப்புத் துறை மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நாட்டின் பாதுகாப்பு நிலை குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. மாநில அரசுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள உளவுப் பிரிவு எச்சரிக்கைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications