For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சூரிய-சந்திர கிரகணங்கள்: ஆக 1-16ல் திருப்பதி கோவில் மூடல்

By Staff
Google Oneindia Tamil News

திருமலை: சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் காரணமாக ஆகஸ்ட் 1 மற்றும் 16 ஆகிய நாட்களில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் முதல் தேதி மாலை 4.30 முதல் 6.04 வரை சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதையடுத்து அன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 6.30 மணி வரை திருமலை வெங்கடாசலபதி கோயில் நடை சாத்தப்படுகிறது என்று தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கிரகணம் முடிந்த பிறகு கோயில் சுத்தம் செய்யப்பட்டு பரிகார பூஜைகள் முடிந்த பிறகு இரவு 8 மணிக்கு தரிசனம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலிலும் காலை 10 முதல் மாலை 6.30 மணி வரை நடை சாத்தப்படுகிறது.

அதேபோல ஆகஸ்ட் 16ம் தேதி சந்திர கிரகணம் வருகிறது. அன்று பிற்பகல் 1.05 முதல் 4.14 வரை கிரகணம் நிலவும். எனவே அன்றைய தினமும் வெங்கடாசலபதி கோவில் மற்றும் பத்மாவதி கோவில் உள்ளிட்ட துணைக் கோவில்கள் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் சுப்ரபாதம் தவிர அனைத்து பூஜைகளும் இடம் பெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X