காங்-பாஜக பலம் இழந்துவிட்டன- இ.யூ.முஸ்லீம் லீக்
திருச்சி: பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்களின் தேசிய பலத்தை இழந்துவிட்டன என்று இந்திய யூனியன் முலீம் லீக் தலைவர் காதர்மொய்தீன் எம்பி தெரிவித்தார்.
திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பெங்களூரில் தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது. தீவிரவாத்தில் ஈடுபடுபவர்கள் மனிதநேய விரோதிகளாவார்கள். மதத்தின் பெயரால் அவர்களை குறிப்பிட வேண்டாம்.
பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்களின் தேசிய பலத்தை இழந்துவிட்டன. இனி மாநில கட்சிகளை நம்பியே மத்தியில் ஆட்சி அமைக்க முடியும்.
கூட்டணி என்பது தேர்தலை ஒட்டி அமைக்கப்படுவதாகும். தற்போது மத்தியில் காங்கிரஸ் கூட்டணிக்கும், மாநிலத்தில் திமுக கூட்டணிக்கு மக்களிடத்தில் பேராதரவும் உள்ளது.
லோக்சபாவில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஒரு சில எம்பிக்கள் செய்த செயலை (லஞ்சம்) காரணம் காட்டி அனைத்து எம்பிக்களையும் குற்றம் சாட்டுவது சரியானது அல்ல. அவ்வாறு நடந்திருந்தால் அது ஜனநாயாகத்திற்கு தலைகுனிவாகும் என்றார்.